புராண வரலாறுகள் பலவற்றைக் கூறியருளிய பின்னர், அவை உலகத் தோற்ற ஒடுக்கங்களைப் புனைந்து கூறுவதாய இயைபு பற்றி அவற்றை உண்மையான் உணர்த்த வேண்டி முதற்கண் முப்பது திருமந்திரங்களால் சருவ சிருட்டி கூறுகின்றார். `சருவம்` என்பது இனிவரும் திதி முதலியவற்றோடும் இயையும்.